sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 ஓய்வு ராணுவ வீரர் உட்பட இருவர் மர்மச்சாவு

/

 ஓய்வு ராணுவ வீரர் உட்பட இருவர் மர்மச்சாவு

 ஓய்வு ராணுவ வீரர் உட்பட இருவர் மர்மச்சாவு

 ஓய்வு ராணுவ வீரர் உட்பட இருவர் மர்மச்சாவு


ADDED : மார் 08, 2026 12:58 AM

Google News

ADDED : மார் 08, 2026 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரிதாபாத்: ஹரியானாவில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மற்றும் அவரது சகோதரர் காருக்குள் இறந்து கிடந்தனர்.

பீஹார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குந்தன் குமார்,44. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது சகோதரர் ரஞ்சன் குமார்,38. மாற்றுத்திறனாளி.

இருவரும் ஹரியானா மாநிலம் பரிதாபாத் ரோஷன் நகரில், 10 ஆண்டுகளாக வசித்தனர். நேற்று முன் தினம் காலை சகோதரர்கள் இருவரும் காரில் சென்றனர். மாலை வரை வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் குடும்பத்தினர் விசாரித்தனர். ஆனால், எந்த தகவலும் தெரியவில்லை. இதையடுத்து, போலீசில் புகார் செய்தனர்.

இந்நிலையில், பரிதாபாத் நவீன் நகர் அக்வான்பூர் சாலை ஓரத்தில் நேற்று முன் தினம் காலை 10:00 மணியில் இருந்து ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு நேற்று தகவல் கிடைத்தது.

போலீசார் விரைந்து சென்றனர். கார் கதவை உடைத்து திறந்தனர். காருக்குள் குந்தன் குமார் மற்றும் ரஞ்சன் குமார் ஆகிய இருவரும் இறந்து கிடந்தனர். உடல்களை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us