sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏ.டி.எம்.,மில் கொள்ளை இருவருக்கு 8 ஆண்டு சிறை

/

ஏ.டி.எம்.,மில் கொள்ளை இருவருக்கு 8 ஆண்டு சிறை

ஏ.டி.எம்.,மில் கொள்ளை இருவருக்கு 8 ஆண்டு சிறை

ஏ.டி.எம்.,மில் கொள்ளை இருவருக்கு 8 ஆண்டு சிறை


ADDED : டிச 31, 2024 05:27 AM

Google News

ADDED : டிச 31, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு: போலியான ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்தி, மக்களின் பணத்தை கொள்ளையடித்த இரண்டு வெளிநாட்டு பிரஜைகளுக்கு, எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

துமகூரு நகரில், பல்வேறு ஏ.டி.எம்., இயந்திரத்தில், மர்ம நபர்கள், 'ஸ்கிம்மிங்' மெஷினுடன் கேமரா பொருத்தினர். வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வரும் போது, ஏ.டி.எம்., கார்டு பின்கோடு கேமராவில் பதிவாகும். இந்த தகவல்களை வைத்து, போலியான கார்டுகள் தயாரித்து, ஏ.டி.எம்.,மில் பணத்தை எடுத்து வந்துள்ளனர்.

இத்தகைய சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தன. 2022 ஆகஸ்ட் 31ல் நடந்த திருட்டு தொடர்பாக, துமகூரின் சைபர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், நைஜீரியாவின் லாரன்ஸ் மொகாமோ, 35, கென்யாவின் இவான் கம்போஜி, 35, ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையை முடித்து, துமகூரின் 2வது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானதால், இருவருக்கும் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 5.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.






      Dinamalar
      Follow us