sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இரு பயங்கரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக் கொலை

/

இரு பயங்கரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக் கொலை

இரு பயங்கரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக் கொலை

இரு பயங்கரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக் கொலை


ADDED : ஜூலை 30, 2025 11:59 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற நம் ராணுவம், ஊடுருவல் முயற்சியை முறியடித்தது.

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு அருகே, நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கிடமாக இருவர் நடமாட்டம் இருப்பதை ராணுவத்தினர் கண்டறிந்தனர்.

அவர்களை சுற்றி வளைத்தபோது, வீரர்களை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலுக்கு நம் வீரர்கள் சுட்டதில், இருவரும் கொல்லப்பட்டனர். 'ஆப்பரேஷன் சிவசக்தி' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, ஜம்முவைச் சேர்ந்த நம் ராணுவத்தின் 'ஒயிட் நைட் கார்ப்ஸ்' வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதன் வாயிலாக, ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது; மூன்று ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன' என குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us