sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தீவிர விவாதம்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

/

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தீவிர விவாதம்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தீவிர விவாதம்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தீவிர விவாதம்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்


ADDED : மே 21, 2025 05:58 PM

Google News

ADDED : மே 21, 2025 05:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து தீவிர விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள ஒரு முன்மொழிவாகும். இதன்படி, நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களையும் ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்துவதை வலியுறுத்துவதாகும்.

இந்நிலையில் இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் வல்லுநர்களுடன் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது:

அடிக்கடி தேர்தல்கள் நடத்துவது நிர்வாகத்திற்கு இடையூறாகவும், பொதுச் செலவினங்களை உயர்த்துவதாகவும் இருக்கிறது. ஆகவே

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து தீவிரமான விவாதம் நடத்தப்பட வேண்டும்.

மேலும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அடிக்கடி தேர்தல்கள் நடப்பது அரசியல் தலைமை மற்றும் நிர்வாக இயந்திரத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பதாகவும், நீண்டகால கொள்கை முடிவுகளுக்கு இடமளிக்க மறுக்கின்றனர்.

இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் பேசினார்.






      Dinamalar
      Follow us