ADDED : டிச 13, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையே மோதல் நீடித்து வருகிறது. இதில், எல்லையில் அமைந்துள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமான பிரேயா விஹார் சிவன் கோவில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை துரதிர்ஷ்டவசமானது. இதில், பிரேயா விஹார் கோவில் சேதம் அடைந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். இரு தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

