sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமெரிக்காவில் இருந்து இதுவரையில் 2,790 இந்தியர்கள் வெளியேற்றம்; மத்திய அரசு

/

அமெரிக்காவில் இருந்து இதுவரையில் 2,790 இந்தியர்கள் வெளியேற்றம்; மத்திய அரசு

அமெரிக்காவில் இருந்து இதுவரையில் 2,790 இந்தியர்கள் வெளியேற்றம்; மத்திய அரசு

அமெரிக்காவில் இருந்து இதுவரையில் 2,790 இந்தியர்கள் வெளியேற்றம்; மத்திய அரசு

2


ADDED : அக் 31, 2025 07:17 AM

Google News

2

ADDED : அக் 31, 2025 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 2,790 இந்தியர்கள் அங்கிருந்து திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து, சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை நாடு கடத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த இந்தியர்கள், மீண்டும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரையில் 2,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து இதுவரை 2,790 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது; கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 2,790 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் தங்குவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பூர்த்தி செய்யாததால், சட்டவிரோத குடியிருப்பாளர்களாகக் கருதி நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல, இந்தாண்டில் மட்டும் பிரிட்டனில் இருந்து 100 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர், எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us