sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பசுமை பட்டாசுகளை பயன்படுத்துங்கள்! சித்தராமையா எச்சரிக்கை

/

பசுமை பட்டாசுகளை பயன்படுத்துங்கள்! சித்தராமையா எச்சரிக்கை

பசுமை பட்டாசுகளை பயன்படுத்துங்கள்! சித்தராமையா எச்சரிக்கை

பசுமை பட்டாசுகளை பயன்படுத்துங்கள்! சித்தராமையா எச்சரிக்கை


ADDED : அக் 27, 2024 10:59 PM

Google News

ADDED : அக் 27, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''தீபாவளிக்கு பசுமை பட்டாசு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை மீறுவோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும்,'' என, முதல்வர் சித்தராமையா எச்சரித்தார்.

பெங்களூரின் கிருஷ்ணா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம், முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார்.

அவர் பேசியதாவது:

தீபாவளி பண்டிகையின்போது, பசுமை பட்டாசுக்கு மட்டும் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள் இது தொடர்பாக, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரவு 8:00 முதல் 10:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு, அனுமதி அளிக்கப்படாது.

வேறு பட்டாசுகளை பயன்படுத்தி, விதிகளை மீறுவோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும்.

பட்டாசு சேகரித்து வைத்துள்ள இடங்களில், அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விஷயத்தில், அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us