sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புலி மனிதர் என அழைக்கப்படும் வால்மீக் தாப்பர் காலமானார்

/

புலி மனிதர் என அழைக்கப்படும் வால்மீக் தாப்பர் காலமானார்

புலி மனிதர் என அழைக்கப்படும் வால்மீக் தாப்பர் காலமானார்

புலி மனிதர் என அழைக்கப்படும் வால்மீக் தாப்பர் காலமானார்


ADDED : மே 31, 2025 06:06 PM

Google News

ADDED : மே 31, 2025 06:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வனவிலங்கு காப்பாளரும், இயற்கை ஆர்வலருமான வால்மீக் தாப்பர் 73, புற்றுநோயால் காலமானார்.

இந்தியாவின் புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரும், நாட்டின் 'புலி மனிதன்' என்று பரவலாக அறியப்படும் வால்மிக் தாப்பர், இன்று காலை டில்லியில் உள்ள தனது கவுடில்யா மார்க் இல்லத்தில் காலமானார். புற்றுநோயுடன் நீண்டகாலம் போரடிய அவர் இன்று காலமானார்.வால்மீக் தாப்பர்,இந்தியாவின் புலிகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் அவர் ஆற்றிய பணிக்காக 'புலி மனிதன்' என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

தாப்பர், தனது வாழ்க்கையின் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வனவிலங்கு பாதுகாப்பிற்காக அர்ப்பணித்து, புலிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தினார்.

சமூக அடிப்படையிலான பாதுகாப்பு முயற்சிகளில் கவனம் செலுத்தும் ஒரு அரசு சாரா அமைப்பான ரந்தம்போர் அறக்கட்டளையை 1988 இல் இணைந்து நிறுவினார். வேட்டையாடுதல் எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் இயற்கை புலி வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்காக அவர் குரல் கொடுத்தார், பெரும்பாலும் மனித தலையீடு இல்லாத பிரத்தியேக மண்டலங்களை வரையறுக்க வலியுறுத்தினார்.






      Dinamalar
      Follow us