sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு

/

ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு

ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு

ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு

90


ADDED : ஏப் 17, 2025 05:00 PM

Google News

ADDED : ஏப் 17, 2025 05:00 PM

90


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும் சூழ்நிலை இருக்கக்கூடாது,'' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறினார்.

ராஜ்யசபா குழு தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது: நாட்டில் சட்டத்தின் ஆட்சியை செயல்படுத்துவது தான் ஒருவரின் வேலை. அதற்கு யாரின் அனுமதியும் தேவையில்லை. ஆனால், நீதிபதிகள் மீது நேரடியாக வழக்குப்பதிவு செய்ய முடியாது. நீதித்துறை அனுமதி பெற வேண்டும். ஆனால், அரசியலமைப்பில் அவ்வாறு கூறப்படவில்லை.

வழக்கு தொடர்வதில் இருந்து ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு மட்டுமே விலக்கு அளித்து உள்ளது. அப்படியானால் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பிரிவு எப்படி இந்த விலக்கை பெற்றுள்ளது. இதன் விளைவுகள் அனைவரின் மனதிலும் உணரப்படுகிறது.

சமீபத்திய தீர்ப்பு மூலம் ஜனாதிபதிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. நாடு எதை நோக்கி செல்கிறது. நாட்டில் என்ன நடக்கிறது. தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு செய்கிறோமா இல்லையா என்பது பற்றி அல்ல. ஜனநாயகத்திற்காக நாங்கள் எப்போதும் பேரம் பேசியது கிடையாது. குறிப்பிட்ட காலத்திற்குள் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் அல்லது அது சட்டமாகிவிடும்.

நம்மிடம் உள்ள நீதிபதிகள் சட்டம் இயற்றுபவர்களாகவும், நிர்வாக செயல்பாடுகளை ஆய்வு செய்பவர்களாகவும், சூப்பர் பார்லிமென்ட் ஆக செயல்படுபவர்களாகவும் உள்ளனர்.நாட்டின் சட்டம் அவர்களுக்கு பொருந்தாத காரணத்தினால் அவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை.

ஜனாதிபதியை உச்சநீதிமன்றம் வழிநடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது.அரசியலமைப்பின் கீழ் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள ஒரே உரிமை சட்டப்பிரிவு 145(3) ஐ விளக்குவதுதான். அங்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் இருக்க வேண்டும். பிரிவு 142 ஜனநாயக சக்திகளுக்கு எதிரான ஏவுகணையாக மாறி உள்ளது. இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.






      Dinamalar
      Follow us