sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விக்ரம் சிங் மஜிதியாவுக்கு காவல் நீட்டிப்பு

/

விக்ரம் சிங் மஜிதியாவுக்கு காவல் நீட்டிப்பு

விக்ரம் சிங் மஜிதியாவுக்கு காவல் நீட்டிப்பு

விக்ரம் சிங் மஜிதியாவுக்கு காவல் நீட்டிப்பு


ADDED : ஜூலை 20, 2025 02:40 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்:சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் விக்ரம் சிங் மஜிதியாவின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 2ம் தேதி வரை நீட்டித்து

மொஹாலி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக, பஞ்சாப் மாநில ஊழல் தடுப்புப் பிரிவினர், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் விக்ரம் சிங் மஜிதியா வீட்டில், ஜூன் 25ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விக்ரம் சிங் மஜிதியா கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்குப் பின் கடந்த, 6ம் தேதி பாட்டியாலா நியூநாபா சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றக் காவல் நிறைவடைந்ததை அடுத்து, மொஹாலி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று, மஜிதியா ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, மஜிதியாவின் நீதிமன்றக் காவலை நீட்டிக்கக் கோரி, அரசு வழக்கறிஞர் பெர்ரி சோபாத் மனுத்தாக்கல் செய்தார். அதை ஏற்றுக் கொண்ட மாவட்ட நீதிபதி, மஜிதியாவின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட், 2ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, பாட்டியாலா சிறைக்கு மஜிதியா அழைத்துச் செல்லப்பட்டார். மொஹாலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us