'நம் வரலாறை நாம் தான் எழுத வேண்டும்' தொழிலதிபர் கவுதம் அதானி பேச்சு
'நம் வரலாறை நாம் தான் எழுத வேண்டும்' தொழிலதிபர் கவுதம் அதானி பேச்சு
ADDED : அக் 12, 2025 04:19 AM

மும்பை: ''நம் வரலாறை நாம் தான் எழுத வேண்டும். இல்லை எனில், நாம் யார் என்பதை மற்றவர்கள் திரித்து எழுதி விடுவர். சினிமா, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மூலம், நம் நாட்டின் வரலாறை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும்,'' என, பிரபல தொழிலதிபரும், அதானி குழும தலைவருமான கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
பணிவு அல்ல மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள, 'விசிலிங் வுட்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில், பிரபல தொழிலதிபரும், அதானி குழும தலைவருமான கவுதம் அதானி பேசியதாவது:
நம் வரலாறை நாம் தான் சொல்ல வேண்டும். இல்லை எனில், நாம் யார் என்பதை மற்றவர்கள் திரித்து எழுதி விடுவர். சினிமா, கதை சொல்லல், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மூலம் நம் நாட்டின் வரலாறை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும். மவுனம் என்பது பணிவு அல்ல, அது சரணடைதல்.
காந்தி, ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற திரைப்படங்கள் நம் நாட்டின் கதைகள். இவை, பெரும்பாலும் மேற்கத்திய கண்ணோட்டத்திலேயே சொல்லப்படுகின்றன.
நம் நாடு தன் வரலாறை சொல்ல தவறியதால், அதன் யதார்த்தமான பிம்பத்தை மற்றவர்கள் இழிவுபடுத்தி லாபம் ஈட்ட வழிவகை செய்தது. எனவே, நம் அடையாளத்தை மற்றவர்கள் வரையறுக்க அனுமதிக்கக் கூடாது.
நம்பகத்தன்மை கடந்த 2023ல், அதானி நிறுவனத்தை பற்றி தவறான கதை ஆயுதமாக்கப்பட்டதால், பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு எங்களுக்கு ஏற்பட்டது. இந்த அனுபவம் தான், உண்மையை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதை எனக்கு கற்பித்தது.
ஏனெனில் மவுனமாக இருப்பது, மற்றவர்களுக்கு உங்கள் விதியை எழுத இடம் கொடுக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நம் நாட்டின் வரலாறை உலகம் முழுதும் இன்றயை இளம் தலைமுறையினர் நம்பகத்தன்மையுடன் பரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.