sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

''விரலை உடைச்சுடுவேன்'': மிரட்டல் விடுத்து திரிணமுல் அமைச்சர் சர்ச்சை

/

''விரலை உடைச்சுடுவேன்'': மிரட்டல் விடுத்து திரிணமுல் அமைச்சர் சர்ச்சை

''விரலை உடைச்சுடுவேன்'': மிரட்டல் விடுத்து திரிணமுல் அமைச்சர் சர்ச்சை

''விரலை உடைச்சுடுவேன்'': மிரட்டல் விடுத்து திரிணமுல் அமைச்சர் சர்ச்சை

10


ADDED : ஆக 19, 2024 04:54 PM

Google News

ADDED : ஆக 19, 2024 04:54 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: '' முதல்வர் மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுபவர்களின் விரல்கள் உடைக்கப்படும்'' என திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் உதயன் குஹாவின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மருத்துவக் கல்லூரியில் பணியில் இருந்தபோது முதுகலை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அம்மாநில அமைச்சர் உதயன் குஹா ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது: கோல்கட்டா டாக்டர் சம்பவத்தில் முதல்வர் மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுபவர்களும், சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்துப் பேசுபவர்களும் அடையாளம் காணப்பட்டு அவர்களின் விரல்கள் உடைக்கப்படும். இல்லையெனில் இதுபோன்ற நபர்கள் மேற்குவங்கத்தை வங்கதேசமாக மாற்றிவிடுவார்கள். மருத்துவமனை தாக்கப்பட்ட சம்பவம் நடந்தபிறகு கூட, போலீஸார் யார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. வங்கதேசத்தில் நடந்தது போன்ற சூழலை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வாறு அவர் சர்ச்சையாக பேசியிருந்தார்.

உதயன் குஹாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ., 'திரிணமுல் காங்கிரசின் 'தலிபான்' மனநிலையை இது காட்டுகிறது,' என்று விமர்சித்துள்ளது.






      Dinamalar
      Follow us