sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இதற்கு மேல் அரசு என்ன செய்ய வேண்டும்: கர்நாடக துணை முதல்வர் கேள்வி

/

இதற்கு மேல் அரசு என்ன செய்ய வேண்டும்: கர்நாடக துணை முதல்வர் கேள்வி

இதற்கு மேல் அரசு என்ன செய்ய வேண்டும்: கர்நாடக துணை முதல்வர் கேள்வி

இதற்கு மேல் அரசு என்ன செய்ய வேண்டும்: கர்நாடக துணை முதல்வர் கேள்வி

12


UPDATED : ஜூன் 06, 2025 10:55 PM

ADDED : ஜூன் 06, 2025 10:11 PM

Google News

UPDATED : ஜூன் 06, 2025 10:55 PM ADDED : ஜூன் 06, 2025 10:11 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூருவில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. தன்னால் முடிந்த அனைத்தையும் அரசு செய்து வருகிறது. இதற்கு மேல் அரசு என்ன செய்ய முடியும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: 11 பேர் உயிரிழந்த உடன் நீதி விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறின. இதனை ஏற்றுக் கொண்டு முதல்வர் உடனடியாக நீதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்தார்.

மேலும் பல விசாரணை நடக்கிறது. நிதித்துறை சார்ந்த விசாரணை, நீதி விசாரணை நடக்கிறது. இதற்கு மேல் அரசு என்ன செய்ய முடியும். அரசு தன்னால் முடிந்த சிறந்த விஷயத்தை செய்து வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான திட்டம் தயாரிக்கப்படும். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

ஐ.பி.எல்., கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு நடந்த பாராட்டு விழாவில் வீரர்களை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடினர். இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாநில காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கர்நாடக ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது.

பெங்களூரு அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us