sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும்; பிரிட்டன் எம்பி ஆதரவு

/

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும்; பிரிட்டன் எம்பி ஆதரவு

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும்; பிரிட்டன் எம்பி ஆதரவு

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும்; பிரிட்டன் எம்பி ஆதரவு


ADDED : ஜன 05, 2026 02:33 PM

Google News

ADDED : ஜன 05, 2026 02:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் எம்பி பாப் பிளாக்மேன் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஹை-டீ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது; ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று கடந்த 2019ல் பிரதமர் மோடி, தேர்தல் வாக்குறுதி கொடுத்து, நிறைவேற்றிய போது நான் வலியுறுத்தவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1992ம் ஆண்டு காஷ்மீர் பண்டிதர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட போதே, நான் கோரிக்கை விடுத்தேன்.

ஜம்மு காஷ்மீரில் நிலவும் பயங்கரவாதத்தை மட்டுமல்ல, இந்த மாநிலத்தின் சில பகுதிகள் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதையும் நான் கண்டித்துள்ளேன். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் மீண்டும் இணைக்கப்பட வேண்டும், எனக் கூறினார்.

கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் பிரிட்டன் எம்பி பாப் பிளாக்மேன் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாப் பிளாக்மேன், பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் சொல்லி உரையைத் தொடங்கினார்.






      Dinamalar
      Follow us