sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி

/

கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி

கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி

கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி


ADDED : பிப் 20, 2025 10:23 PM

Google News

ADDED : பிப் 20, 2025 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஹர்கஞ்ச்: சொத்துப் பிரச்னையில் கூலிப்படையை ஏவி கணவரை கொன்று, காணாமல் போனதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

வடக்கு டில்லியின் சக்தி நகர் எப்.சி.ஐ., குடோனுக்கு அருகில் உள்ள மழைநீர் கால்வாயில் 3ம் தேதி ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

அவரது கைவிரல் ரேகையை கொண்டு, அவர் பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சோனு நாகர் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

சோனுவின் மனைவி சரிதாவிடம் இருந்து போலீசார் விசாரணையை துவக்கினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். தீவிர விசாரணை நடத்தியதில், சொத்துக்காக கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

கூலிப்படையை சேர்ந்த பஞ்சாபின் பக்கா சிங், 19, என்பவரை கைது செய்த போலீசார், அவனது கூட்டாளி குர்பிரீத் என்பவனை தேடி வருகின்றனர்.

கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்த சரிதா, அதன் பின் கணவரை காணவில்லை என, குலாபி பாக் போலீசில் புகார் அளித்து நாடகமாடியதும் தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us