sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நீங்கள் சொன்ன பொய்கள் எத்தனை என்பதை நாளை சொல்கிறோம்: எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா சவால்

/

நீங்கள் சொன்ன பொய்கள் எத்தனை என்பதை நாளை சொல்கிறோம்: எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா சவால்

நீங்கள் சொன்ன பொய்கள் எத்தனை என்பதை நாளை சொல்கிறோம்: எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா சவால்

நீங்கள் சொன்ன பொய்கள் எத்தனை என்பதை நாளை சொல்கிறோம்: எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா சவால்

8


ADDED : ஜூலை 28, 2025 08:31 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 08:31 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நீங்கள் சொன்ன பொய்கள் எவ்வளவு என்பதை நாளை நாங்கள் சொல்கிறோம் என்று எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி தந்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தின் ஒரு பகுதியாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (ஜூலை 28) விரிவாக பேசினார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் தொடர்ந்து பதிலளித்துக் கொண்டே வந்தார்.

அவரின் பேச்சின் ஊடே, எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள் சிலர் கூச்சலிட்டு இடையூறு செய்த வண்ணம் இருந்தனர். சபாநாயகர் எவ்வளவோ கேட்டும் அவர்கள் தங்களின் குறுக்கீடுகளை கைவிடவில்லை. எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை கண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா குறுக்கிட்டு பேசினார்.

அவர் கூறியதாவது;

அவர்களுக்கு (எதிர்க்கட்சிகள்) மத்திய வெளியுறவு அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் வேறு ஏதோ சில நாடுகள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அவர்களின் கட்சியில் அந்நியர்களின் முக்கியத்துவம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

அவர்களின் அனைத்து விஷயங்களும் இங்கே திணிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதனால் தான் அவர்கள் அங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் 20 ஆண்டுகளுக்கு அவர்கள் அங்கேயே தான் உட்கார்ந்து இருக்க போகிறார்கள்.

அவர்கள் (எதிர்க்கட்சி எம்.பி.க்கள்) பேசும் போது, நாங்கள் பொறுமையாக கேட்டோம். நீங்கள் எத்தனை பொய்கள் சொல்லி இருக்கிறீர்கள் என்பதை நாளை நான் இங்கே சொல்வேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

எவ்வளவு ஒரு முக்கியமான விஷயம் இங்கே விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் உண்மையை கேட்க மறுக்கிறார்கள். வெளியுறவு அமைச்சர் பேசும் போது இதுபோன்ற குறுக்கீடுகள் ஏற்புடையதா? எதிர்க்கட்சியினருக்கு சபாநாயகர் இதை புரிய வைக்க வேண்டும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.






      Dinamalar
      Follow us