sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.30 கோடி சுருட்டிய பெண் கைது

/

ரூ.30 கோடி சுருட்டிய பெண் கைது

ரூ.30 கோடி சுருட்டிய பெண் கைது

ரூ.30 கோடி சுருட்டிய பெண் கைது


ADDED : ஜூலை 10, 2025 12:16 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:கர்நாடக மாநிலம், பெங்களூரு பசவேஸ்வரா நகரில் வசிப்பவர் சவிதா, 47.

மகளிர் அமைப்புகளால் பணக்கார பெண்களுக்காக நடத்தப்படும், 'கிட்டி பார்ட்டி' எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு, 'டிப் டாப்' உடை, தங்க நகைகள் அணிந்து செல்லும் சவிதா, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்களிடம் பேச்சு கொடுத்து, மொபைல் போன் நம்பரை வாங்கிக் கொள்வார்.

பின், அப்பெண்களை தொடர்பு கொண்டு, 'என் மகள் அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அங்கு, நீங்கள் பண முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும்.

'பணத்தை இரட்டிப்பாக்கி தரும் தொழில் செய்கிறேன். வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு, தங்கம் வாங்கி கொடுக்கிறேன்' என, ஆசைகாட்டி வலை விரிப்பார்.

சவிதாவின் பேச்சை நம்பிய 20 பெண்கள், 50 லட்சம் ரூபாய் முதல் 2.5 கோடி ரூபாய் வரை கொடுத்துள்ளனர். ஆனால், பணத்தை சவிதா இரட்டிப்பாக்கிக் கொடுக்கவில்லை. இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கேட்டபோது, சவிதா கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

சவிதா மீது அந்த பெண், பசவேஸ்வரா நகர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சவிதாவை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

சவிதா, 20 பெண்களிடம் 30 கோடி ரூபாய் மோசடி செய்தது, விசாரணையில் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us