நாட்டையும், மதத்தையும் பாதுகாக்கும் பெண்கள்; திறமையை பாராட்டிய ராஜ்நாத் சிங்
நாட்டையும், மதத்தையும் பாதுகாக்கும் பெண்கள்; திறமையை பாராட்டிய ராஜ்நாத் சிங்
ADDED : நவ 16, 2025 04:00 PM

லக்னோ: 'நாட்டையும், மதத்தையும் பாதுகாப்பதில் பெண்கள் பின்தங்கியதில்லை. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பெண் விமானிகள் முக்கிய பங்கு வகித்தனர்' என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், சுதந்திரப் போராட்ட வீராங்கனை உதா தேவி பாசியின் சிலையை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
உண்மையான தைரியம் அநீதி, பாகுபாடு மற்றும் அடிமைத்தனத்திற்கு எதிராக நிமிர்ந்து நிற்பதில் உள்ளது என்பதை உதா தேவியின் தியாகம் நமக்குக் கற்பிக்கிறது. உதா தேவியின் வாழ்க்கை பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சமத்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியப் பெண்கள் தங்கள் நாட்டையும் மதத்தையும் பாதுகாப்பதில் ஒருபோதும் பின்தங்கியதில்லை.
சியாச்சின் டூ கடல்...!
சியாச்சின் மலையின் உயரத்திலிருந்து கடலின் ஆழம் வரை இந்தியப் பெண்கள் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தி வருகின்றனர். ஆப்பரேஷன் சிந்தூர் போது, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பெண் விமானிகள் மற்றும் வீரர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இந்தியாவின் மரியாதை மற்றும் பெருமையைப் பாதுகாக்க ஒவ்வொரு பெண்களும் உதா தேவியாக முடியும் என்பதையும் நான் தயக்கமின்றி சொல்ல முடியும்.
பாராட்டு
பல ஆண்டுகளாக பலரால் சாதிக்க முடியாத பணிகளைச் செய்ததற்காக யோகி ஆதித்யநாத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். சமூக நலனுக்காக இவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு முதல்வரை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவர் நிழலில் இருந்து ஹீரோக்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

