sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விமான விபத்து விசாரணை குழு தலைவருக்கு 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு

/

விமான விபத்து விசாரணை குழு தலைவருக்கு 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு

விமான விபத்து விசாரணை குழு தலைவருக்கு 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு

விமான விபத்து விசாரணை குழு தலைவருக்கு 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு

6


ADDED : ஜூன் 29, 2025 01:37 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 01:37 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஆமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் குழுவின் தலைவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அவருக்கு, 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு புறப்பட்ட, 'ஏர் இந்தியா' விமானம் கடந்த, 12ம் தேதி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், 274 பேர் உயிரிழந்தனர்.

விசாரணை


இந்த விபத்து குறித்து ஏ.ஏ.ஐ.பி., எனப்படும் விமான விபத்து புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இப்பிரிவின் தலைவராக இயக்குநர் ஜெனரல் யுகேந்தர் உள்ளார்.

இவரது தலைமையின் கீழ் விமான மருத்துவப் பிரிவு, விமான போக்கு வரத்து கட்டுப்பாடு, அமெரிக்க அரசின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு, விபத்துக்குள்ளான விமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து விமானி அறையில் பதிவாகும் உரையாடல்கள் மற்றும் விமான இயக்க பதிவுகள் உள்ளிட்டவை அடங்கிய கருப்பு பெட்டிகளை பாதுகாப்பு படையினர் மீட்டு, விசாரணை குழுவிடம் கடந்த 24ம் தேதி ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து, விமான விபத்து தொடர்பான விசாரணை தீவிரம்அடைந்துள்ளது.

இந்நிலையில், விசாரணை குழு தலைவரான யுகேந்தரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

மத்திய ரிசர்வ் படை


இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அவருக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

ஊழியர்கள் நீக்கம்

'ஏர் இந்தியா' விமானம் விபத்துக்குள்ளான சில தினங்களில், அந்நிறுவனத்தின் சரக்குகளை கையாளும் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள், பார்ட்டி வைத்து ஆடிப்பாடி கொண்டாடிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில், ஊழியர்களின் செயலுக்கு, ஏர் இந்தியா நிறுவனம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில், 'துயரமான சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். சமீபத்தில் வெளியான வீடியோவிற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். இதை மட்டுமே வைத்து எங்களை மதிப்பிடவேண்டாம். பொறுப்பு தவறி நடந்துகொண்ட நான்கு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிட்டுள்ளது.








      Dinamalar
      Follow us