sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏப்.5 வரை கொட்டப்போகுது மழை கேரளாவுக்கு ' எல்லோ அலர்ட்'

/

ஏப்.5 வரை கொட்டப்போகுது மழை கேரளாவுக்கு ' எல்லோ அலர்ட்'

ஏப்.5 வரை கொட்டப்போகுது மழை கேரளாவுக்கு ' எல்லோ அலர்ட்'

ஏப்.5 வரை கொட்டப்போகுது மழை கேரளாவுக்கு ' எல்லோ அலர்ட்'


ADDED : ஏப் 03, 2025 02:34 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கேரளாவில் ஏப்.5 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுத்தது.

கேரளாவில் தற்போது கோடை காலம் என்பதால் வெப்பம் அதிகரித்தது. அதனால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை அனுபவித்து வரும் நிலையில் மாநிலத்தில் ஏப்.5 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ' எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுத்தது. அதனால் சற்று ஆறுதல் அடைந்தனர்.

இன்று (ஏப்.3) இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், நாளை (ஏப்.4) பாலக்காடு, மலப்புரம், வயநாடு, ஏப்.5ல் இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டது.

இம்மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் 64.5 முதல் 115.5 மி. மீ., வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் பொது மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.






      Dinamalar
      Follow us