ADDED : மார் 07, 2026 01:44 AM

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் சூழல் மிகவும் அசாதாரணமானது. உலக பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கலாம். இது, எதிர்காலத்தில் எந்த திசையில் செல்லும் என்பதை உறுதியாக கூறுவது கடினம். உலகின் பெரிய கடல்சார் நாடான நம் நாடு, நம்பிக்கை, திறன் மற்றும் தெளிவான பார்வையுடன் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும்.
ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,
ஒத்திகை பார்க்கும் மம்தா!
வரும் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், என்ன செய்ய வேண்டும் என்பதை ஒத்திகை பார்க்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். பா.ஜ., ஆட்சி அமைத்து, 45 நாட்களுக்குள் ஏழாவது ஊதிய குழுவை அறிவிப்போம். 'அன்னபூர்ணா பந்தர்' திட்டம் மூலம் அனைத்து பெண்களுக்கும் 3,000 ரூபாய் வழங்கப்படும்.
சுகந்தா மஜும்தார் மத்திய அமைச்சர், பா.ஜ.,
நிதிஷுக்கு செய்த சதி!
பீஹார் முதல்வராக நிதிஷ் குமார் பொறுப்பேற்று நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள், அவர் வெளியேற்றப்பட உள்ளார். இது, ஓட்டளித்த மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம். நிதிஷ் குமாரை முதல்வராக்கவே அவர்கள் ஓட்டளித்தனர்; பா.ஜ.,வைச் சேர்ந்தவரை முதல்வராக்க அல்ல. இது, நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி செய்த சதி.
ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்.,

