sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 கட்டையால் அடித்து வாலிபர் கொலை

/

 கட்டையால் அடித்து வாலிபர் கொலை

 கட்டையால் அடித்து வாலிபர் கொலை

 கட்டையால் அடித்து வாலிபர் கொலை


ADDED : நவ 14, 2025 07:45 PM

Google News

ADDED : நவ 14, 2025 07:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம்நகர்: ஹோட்டலுக்கு இரவு உணவு சாப்பிட சென்ற, வாலிபர் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார். ஹோட்டலின் கண்காணிப்பு கேமரா சாதனங்களை கொலையாளிகள் துாக்கிச் சென்றனர்.

பெங்களூரு தெற்கு மாவட்டம், சென்னப்பட்டணா தாலுகா கொண்டாபுரா கிராமத்தை சேர்ந்தவர் நிஷாந்த், 25. பிடதி தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்தார். இதனால் பிடதியில் அறை எடுத்துத் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, பிடதியில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். ஹோட்டல் முன் நிஷாந்த்தை மறித்த ஆறு பேர், அவரிடம் தகராறு செய்தனர்.

திடீரென காரில் இருந்து மரக்கட்டையை எடுத்து வந்து, நிஷாந்த்தை சரமாரியாக தாக்கினர். தலையில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். ஹோட்டலுக்குள் சென்ற கொலையாளிகள், கண்காணிப்பு கேமரா மூலம் வீடியோ பதிவாகும் சாதனங்களை துாக்கிச் சென்றனர்.

தகவல் அறிந்த எஸ்.பி., சீனிவாஸ் கவுடா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரித்து தகவல் பெற்றனர். விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us