ADDED : அக் 04, 2025 08:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:யமுனை நதியில் ஒருவர் மூழ்கி விட்டதாக நேற்று காலை 8:30 மணிக்கு தகவல் கிடைத்து, தீயணைப்புப் படையினர் விரைந்து சென்றனர்.
சவுஹான்பட்டி புஸ்தா சாலையில், எதிரில் வந்த பைக் மீது தீயணைப்பு படையினரின் வேன் மோதியது.
பைக்கில் வந்த சோனியா விஹார், 5வது புஷ்தாவைச் சேர்ந்த ரோஹித் பால்,18, தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நீரில் மூழ்கியவரை தேடும் பணி இரவு வரை தொடர்ந்தது.