sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காட்டு யானை தாக்கி கேரளாவில் இளைஞர் பலி

/

காட்டு யானை தாக்கி கேரளாவில் இளைஞர் பலி

காட்டு யானை தாக்கி கேரளாவில் இளைஞர் பலி

காட்டு யானை தாக்கி கேரளாவில் இளைஞர் பலி


ADDED : ஏப் 15, 2025 02:12 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சூர் : கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில், சாலக்குடி அருகேயுள்ள அதிரப்பள்ளியை சேர்ந்தவர் செபாஸ்டியன், 20.

பழங்குடியினத்தைச் சேர்ந்த செபாஸ்டியனும், அவரது நண்பர்கள் மூவரும் சேர்ந்து, தேன் சேகரிப்பதற்காக வனப்பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு சென்றனர்.

தேன் சேகரித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அடர்ந்த இருட்டு பகுதியில் நின்றிருந்த காட்டு யானை அவர்களை துரத்தியது.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் சிதறி ஓடத் துவங்கினர். மூவர் தப்பியோடிய நிலையில், செபாஸ்டியன் மட்டும் யானையிடம் சிக்கிக் கொண்டார்.

தவறி கீழே விழுந்த அவரை, யானை மிதித்து கொன்றது. தகவல் அறிந்த போலீசார், செபாஸ்டியன் உடலை மீட்டனர். வனத்துறையினரும், போலீசாரும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us