இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டளியுங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டளியுங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
ADDED : மே 25, 2024 07:59 AM

புதுடில்லி: பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு, ஆறாம் கட்ட லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆறாவது கட்ட லோக்சபா தேர்தலில் அதிகமான வாக்காளர்கள் ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது. தேர்தல் பணியில் பொதுமக்களின் தீவிரப் பங்கேற்பு இருந்தால் தான் ஜனநாயகம் செழித்து, துடிப்புடன் காட்சியளிக்கும். குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டளிக்க வேண்டும். இளம் வாக்காளர்கள் தங்கள் ஓட்டு உரிமையைப் பயன்படுத்துமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

