sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

வெளிநாட்டு கல்வி; திட்டமிடல் அவசியம்!

/

வெளிநாட்டு கல்வி; திட்டமிடல் அவசியம்!

வெளிநாட்டு கல்வி; திட்டமிடல் அவசியம்!

வெளிநாட்டு கல்வி; திட்டமிடல் அவசியம்!


செப் 27, 2024 12:00 AM

செப் 27, 2024 12:00 AM

Google News

செப் 27, 2024 12:00 AM செப் 27, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைய காலகட்டத்தில், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். பெரும்பாலானோர் விருப்பமான வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற பிறகே தங்குமிடம் குறித்த தேடலில் இறங்குகின்றனர். தங்குமிடம் குறித்து முன்பே சிந்திக்காமல் இருத்தல் சில நேரங்களில் கல்வியை தொடர்வதிலேயே பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தங்குமிட வசதிகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனமும், திட்டமிடலும் அவசியம். சரியான தங்குமிடத்தை தேர்வு செய்வது, அவர்களின் கல்வி பயணத்தை இலகுவாக்க உதவும். பொதுவாக, பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்களுக்கான விடுதிகள், தனியார் அமைப்புகள் வாயிலாக வீடு அல்லது அறைகள், பகிர்வு அடிப்படையிலான விடுதிகள் என மாணவர்கள் தேர்வு செய்ய சில வாய்ப்புகள் உள்ளன.

பல்கலைக்கழக விடுதிகள்:

பல்கலைக்கழகங்கள் தங்களது மாணவர்களுக்கு அளிக்கும் முதன்மை வசதிகளில், தங்குமிட வசதி குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள விடுதிகள் மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான இடமாக இருக்கிறது. ஆனால், இவை அனைத்து மாணவர்களுக்கும் எளிதில் கிடைப்பதில்லை. மேலும், செலவினங்களும் இதில் மிகவும் அதிகம்.

தனியார் தங்குமிடங்கள்:
பல்கலைக்கழகத்தின் வெளியே, தனியார் நிறுவனங்கள் அல்லது வீட்டு உரிமையாளர்கள் வாயிலாக மாணவர்கள் தனித்து தங்க அனுமதிக்கப்படுவர். இதனால் தனி விடுதி, தனிநபர் சுதந்திரம் போன்றவை கிடைக்கும். எனினும், நம்பகமான இடமும், அதிக வாடகையும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

விடுதி மற்றும் பகிர்வு அடிப்படையிலான விடுதிகள்:
சில மாணவர்கள் கூட்டாக சேர்ந்து தங்கலாம். இது குறைந்த செலவில் தங்குமிடத்தை ஏற்படுத்தி தரும். இது குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு மிகவும் சாதகமான ஒன்று. எனினும், முன் கூட்டியே ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் அவசியம்.

தங்குமிடத்தைத் தேர்வு செய்யும் முன் கவனிக்க வேண்டியவை:


* பல்கலைக்கழகத்துக்கு நெருக்கமாக உள்ள இடங்கள் சாதகமாக இருக்கும்.
* வாடகை, கூடுதல் செலவுகள் போன்றவை மனதில் கொள்ள வேண்டும்.
* அடிப்படை வசதிகள், சமையல் வசதி போன்றவை நல்ல முறையில் இருக்க வேண்டும்.
* தங்குமிடங்களில் பாதுகாப்பு மிக முக்கியம். 24/7 கண்காணிப்பு மற்றும் அடையாளத்துடன் நுழைவது போன்ற அம்சங்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

ஆலோசனை:
தங்குமிட தொடர்பான ஆலோசனைகளை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ ஆலோசகர்கள் வாயிலாக பெறலாம். அவர்கள் தங்குமிட தேடல், வாடகை ஒப்பந்தம், பாதுகாப்பு போன்றவற்றில் உதவியாக இருப்பர். மேலும், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழக படிப்புகளுக்கு ஏற்ற தங்குமிடத்தை கண்டறிய நம்பகமான, பிரத்யேக இணையதளங்களும் உதவும்.

-மயங்க் மகேஸ்வரி, இணை நிறுவனர், யுனிவர்சிட்டி லிவ்விங்.






      Dinamalar
      Follow us