அக் 25, 2012 12:00 AM
அக் 25, 2012 12:00 AM
பொருளாதாரத்துக்கு ஆதாரமே ஆற்றல் (எனர்ஜி)தான். அன்றாட தேவைகளுக்கு ஆற்றல் அவசியம். வாழ்க்கையை இயங்க ஆதாரமாக இருக்கும் இந்த எரிபொருள்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன, எங்கிருந்து இது கிடைக்கிறது என்று நாம் ஒருபோதும் சிந்தித்து பார்ப்பது கூட இல்லை.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்கள் எப்படி வருகிறது? இந்த எரிபொருள்கள் எப்படி மின்சாரமாக மாறுகின்றது? என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த எனர்ஜி இன்ஜினியரிங் துறை.
ஆற்றல் மூலங்களை கண்டறிந்து, அவற்றைப் பயன்படுத்தக் கூடிய எரிபொருளாக மாற்றுவது; எரிபொருள்களைத் தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்வது; உள்ளூரில் எரிபொருள்களை மக்களின் தேவையை பூர்த்தி செய்ய பாதுகாப்பான முறையில் வினியோகிப்பது என பல நிலைகளிலும், ஆற்றல் துறை நிபுணர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.
வழங்கப்படும் படிப்புகள்
பி.இ., (எனர்ஜி இன்ஜினியரிங்), பி.டெக்., (எனர்ஜி அண்டு என்விரான்மென்டல் இன்ஜினியரிங்), எம்.டெக்., (எனர்ஜிடிக்ஸ்) , எம்.டெக்., (எனர்ஜி), எம்.டெக்., (எனர்ஜி அண்டு என்விரான்மென்டல் இன்ஜினியரிங்), எம்.டெக்., ( எனர்ஜி அண்டு பொலுõசன் கண்ட்ரோல்), எம்.பி.ஏ., (எனர்ஜி மேனேஜ்மென்ட்) ஆகிய பிரிவுகளில் எனர்ஜி படிப்புகள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 படிப்பில், அறிவியல் பிரிவு படித்தவர்கள் இளநிலை படிப்புகளில் சேரலாம்.
கல்வி நிறுவனங்கள்
தமிழகத்தில் பெரும்பாலான இன்ஜினியரிங் கல்லுõரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.
வேலை வாய்ப்புகள்
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள எரிபொருள் தயாரிக்கும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
