மே 28, 2024 12:00 AM
மே 28, 2024 12:00 AM

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 14 அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னையில் இயங்கும் ஒரு சீர்மிகு சட்டப்பள்ளிக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
5 ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்புகள்:
பி.ஏ.,எல்எல்.பி., -ஹானர்ஸ்பி.பி.ஏ.,எல்எல்.பி., - ஹானர்ஸ்பி.காம்.,எல்எல்.பி., - ஹானர்ஸ்பி.சி.ஏ.,எல்எல்.பி., - ஹானர்ஸ்
கல்வி நிறுவனம்:
சீர்மிகு சட்டப்பள்ளி, சென்னை
கல்வித் தகுதி: 12ம் வகுப்பில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
5 ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்பு:
பி.ஏ.,எல்எல்.பி.,
கல்வி நிறுவனங்கள்: சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி - புதுப்பாக்கம் மற்றும் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம், சேலம், காரைக்குடி, நாமக்கல், தேனி ஆகிய நகரங்களில் செயல்படும் அரசு சட்டக்கல்லூரிகள், தனியார் கல்லூரிகளான சரஸ்வதி சட்டக்கல்லூரி - திண்டிவனம் மற்றும் மத்திய சட்டக்கல்லூரி - சேலம்.
கல்வித் தகுதி:
12ம் வகுப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
விண்ணப்பிக்கும் முறை:
அனைத்து அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் சேர்க்கை பெற ஓர் விண்ணப்பம் போதுமானது. சீர்மிகு சட்டப்பள்ளியில் வழங்கப்படும் ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் www.tndalu.ac.in எனும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
இணையதளம்:
www.tndalu.ac.inதொலைபேசி:
044-24641919 / 24957414