sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பொருளாதார நெருக்கடியில் பகுதி நேர ஆசிரியர்கள்; ஊதியம் வழங்க சீமான் வேண்டுகோள்

/

பொருளாதார நெருக்கடியில் பகுதி நேர ஆசிரியர்கள்; ஊதியம் வழங்க சீமான் வேண்டுகோள்

பொருளாதார நெருக்கடியில் பகுதி நேர ஆசிரியர்கள்; ஊதியம் வழங்க சீமான் வேண்டுகோள்

பொருளாதார நெருக்கடியில் பகுதி நேர ஆசிரியர்கள்; ஊதியம் வழங்க சீமான் வேண்டுகோள்


UPDATED : அக் 24, 2024 12:00 AM

ADDED : அக் 24, 2024 06:31 PM

Google News

UPDATED : அக் 24, 2024 12:00 AM ADDED : அக் 24, 2024 06:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தீபாவளிக்கு முன்பே, அரசுப் பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையை தி.மு.க., அரசு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து, சீமான் கூறியதாவது:

கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, தி.மு.க., அரசு பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்திருந்தால், தற்போது இதர அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் கிடைத்து இருக்கும். ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளைக் கடந்தும் திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய மறுப்பது பகுதி நேர ஆசிரியர் பெருமக்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும்.

அதனால் தற்போது கிடைக்கின்ற 12,500 ரூபாய் ஊதியத்தால் பெரும் பொருளாதார நெருக்கடியில் பகுதிநேர ஆசிரியர்கள் சிக்கித்தவித்து வருகின்றார்கள். ஆகவே, 13 ஆண்டுகளாகப் பணிநிரந்தரம் கேட்டு போராடி வருகின்ற 12000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நவம்பர் மாத ஊதியம் மற்றும் விழாக்கால ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டும்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us