sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு உயர்நிலைப் பள்ளியில் தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் பெற்றோர்கள் கவலை

அரசு உயர்நிலைப் பள்ளியில் தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் பெற்றோர்கள் கவலை

அரசு உயர்நிலைப் பள்ளியில் தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் பெற்றோர்கள் கவலை


UPDATED : பிப் 24, 2026 11:21 AM

ADDED : பிப் 24, 2026 11:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 24, 2026 11:21 AM ADDED : பிப் 24, 2026 11:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தொண்டி:
தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெஞ்ச், டெஸ்க் வசதி இல்லாமல் தரையில் அமர்ந்து பாடம் படிப்பதால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 350 மாணவர்கள் படிக்கின்றனர். ​ஆறு மணி நேரம் தொடர்ந்து தரையில் அமர்ந்து குனிந்து எழுதுவதால், சிறு வயதிலேயே மாணவர்களுக்கு முதுகு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மாணவிகள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். ​

இது குறித்து இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன் கூறியதாவது: மாணவர்களின் எதிர்காலத்திற்காக பெற்றோர்கள் படாத பாடுகிறார்கள். ஆனால் பள்ளியில் ஒரு பெஞ்ச், சேர் கூட இல்லை.

இது தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ., கலெக்டர் என அனைவருக்கும் பல முறை நேரில் சென்று மனுக்கள் கொடுத்தும், இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இல்லம் தேடிக் கல்வி, புதுமைப் பெண் என பல திட்டங்களை அரசு அறிவித்தாலும், இருக்கும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளைச் செய்து தருவதில் மெத்தனமாகவே உள்ளது.

நம்புதாளை பள்ளி மாணவர்களின் நிலை குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மாணவர்களின் எதிர்காலம் பெஞ்ச், டெஸ்க் வசதிகளுக்காகக் காத்திருக்கிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களின் முதுகு வலியையும், மன வலியையும் போக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us