sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

செய்முறை தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அலைக்கழிப்பதாக புகார்

/

செய்முறை தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அலைக்கழிப்பதாக புகார்

செய்முறை தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அலைக்கழிப்பதாக புகார்

செய்முறை தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அலைக்கழிப்பதாக புகார்


UPDATED : நவ 01, 2014 12:00 AM

ADDED : நவ 01, 2014 11:49 AM

Google News

UPDATED : நவ 01, 2014 12:00 AM ADDED : நவ 01, 2014 11:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள், செய்முறை தேர்வுக்காக, ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க, அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தனித்தேர்வர்களாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது. தவிர, முந்தைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியை தழுவியவர்களும், இத்தேர்வில் பங்கேற்கலாம்.

நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு, வரும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடக்கவுள்ளது. இதற்கு, மாவட்டந்தோறும் உள்ள நோடல் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். கோவை மாவட்டத்திற்கு, ராஜவீதி, சூலுார் மற்றும் அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் நோடல் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு விண்ணப்பிக்க செல்லும் மாணவர்களுக்கு, உரிய தகவல்களை முறையாக அளிக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க, எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு படித்தமைக்கான மாற்று சான்றிதழ் நகல், அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவையே போதுமானது.

இந்த ஒப்புகை சீட்டு இருந்தால் மட்டுமே, தேர்வுக்கான அனுமதி சீட்டை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால், நோடல் மையங்களில் விண்ணப்பிக்க செல்லும் மாணவர்களை காத்திருக்க வைப்பதும், கல்வி சான்றுகள் குறித்த தகவல்கள் அளிக்கப்படாமல், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், கல்வி சான்றுகளுடன் எங்கு விண்ணப்பிப்பது என தெரியாமல், தனித்தேர்வர்கள் தவித்து வருகின்றனர்.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலக அதிகாரிகள் சிலர் கூறுகையில், &'&'கடந்த செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் தனித்தேர்வர்களுக்கான, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதற்கு, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தோருக்காக, மதிப்பெண்கள் சரிபார்க்கும் பணி, நோடல் மையங்களில் நடக்கிறது. இதனால், புதிய விண்ணப்பங்களை ஏற்பதில் தாமதம் ஏற்படலாம். இருப்பினும், உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, தனித்தேர்வர்களது சிரமம் குறைய நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என்றனர்.






      Dinamalar
      Follow us