அறிவுத்திறன் போட்டியில் இந்திய வம்சாவளி சிறுமி சாதனை
அறிவுத்திறன் போட்டியில் இந்திய வம்சாவளி சிறுமி சாதனை
UPDATED : ஜன 11, 2016 12:00 AM
ADDED : ஜன 11, 2016 12:18 PM
அ நிறம் | அளவு
லண்டன்
: மென்சா
அமைப்பு நடத்திய காட்டெல்-3பி அறிவுத்திறன் போட்டியில், மும்பையில்
பிறந்த இந்திய வம்சாவளி சிறுமி கஷ்மியா வாஹி(11) போட்டியின் அதிகபட்ச மதிப்பெண்ணான
162 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளார்.
மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவுத் திறனை சோதிக்கும் 150 கேள்விகளுக்கு பதிலளித்து 162 மதிப்பெண்கள் எடுத்துள்ள வாஹி, பிரபல அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட இரு மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
