UPDATED : டிச 25, 2023 12:00 AM
ADDED : டிச 25, 2023 10:40 AM
அ நிறம் | அளவு
வால்பாறை:
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணி துவங்கியது.வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட துவக்க விழா, பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தை சுற்றிலும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சுத்தம் செய்தனர்.வரும், 30ம் தேதி வரை நடைபெறும் முகாமில் இயற்கை பாதுகாப்பு, சுகாதாரம், சட்ட விழிப்புணர்வு, போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம், பாட்டுப்போட்டி, பட்டிமன்றம், கலைநிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.முகாமிற்கான ஏற்பாடுகளை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் செய்து வருகின்றனர்.
