sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கோவையில் ஏ.ஐ., தொழில்நுட்ப பூங்கா; முதல்வர் அறிவிப்பு

/

கோவையில் ஏ.ஐ., தொழில்நுட்ப பூங்கா; முதல்வர் அறிவிப்பு

கோவையில் ஏ.ஐ., தொழில்நுட்ப பூங்கா; முதல்வர் அறிவிப்பு

கோவையில் ஏ.ஐ., தொழில்நுட்ப பூங்கா; முதல்வர் அறிவிப்பு


UPDATED : ஜன 09, 2025 12:00 AM

ADDED : ஜன 09, 2025 05:37 PM

Google News

UPDATED : ஜன 09, 2025 12:00 AM ADDED : ஜன 09, 2025 05:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது. சைபர் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் umagine tn தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:


தமிழகத்தின் நீடித்த, நிலையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் மாநாடு. வணிகத்தையும், தொழில்நுட்பத்தையும் ஊக்குவிப்பதில் மற்றவர்களை விட முன்னோடியாக தமிழகம் உள்ளது. மின் வாகன உற்பத்தி, வளரும் தொழில்நுட்பங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.

3வது முன்னணி தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. 2,000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறோம். புத்தாக்கம், தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் பெருகத்தான் செய்யும். கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது. சைபர் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

சிறிய நகரங்களிலும் எல்காட் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும். நகரத்தில் மட்டும் வளர்ச்சி குவியக்கூடாது. உண்மையான வளர்ச்சி சமச்சீராக இருக்க வேண்டும். புத்தாக்கம், தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. ஆட்சிக்கு வந்தது முதல், இந்த வளர்ச்சியே போதும் என நான் நினைத்தது இல்லை. தமிழகத்துக்கு இன்னும் வளர்ச்சி வேண்டும் என அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ் மென்பொருட்களை உருவாக்க முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். எந்த புதுமை வந்தாலும் அதை முயன்று பார்க்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. சைபர் செக்யூரிட்டிக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான கொள்கை ஏற்படுத்தினோம். 2021ல் 14,927 இ-சேவை மையங்கள் இருந்த நிலையில், 2024ம் ஆண்டில் 34,000 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் 1,204 இலவச வைபை மையங்களை நிறுவியிருக்கிறோம். டிஜிட்டல் தொழில்நுட்ப குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நாம் அடுத்தகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இன்னும் கூடுதல் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.






      Dinamalar
      Follow us