sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

திருப்பரங்குன்றம் விவகாரம் திருப்பதி பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

திருப்பரங்குன்றம் விவகாரம் திருப்பதி பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பரங்குன்றம் விவகாரம் திருப்பதி பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பரங்குன்றம் விவகாரம் திருப்பதி பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்


UPDATED : பிப் 07, 2025 12:00 AM

ADDED : பிப் 07, 2025 12:09 PM

Google News

UPDATED : பிப் 07, 2025 12:00 AM ADDED : பிப் 07, 2025 12:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதி:
திருப்பதி வேளாண் பல்கலையில், சக்தி வாய்ந்த, இரண்டு பைப் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஆந்திராவின் திருப்பதியில் உள்ள வேளாண் பல்கலைக்கு நேற்று காலை 8:45 மணிக்கு இ - மெயில் ஒன்று வந்தது. ஸ்வாதி பிலால் மாலிக் என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள அந்த மெயிலில், பல்கலை வளாகத்தில் சக்திவாய்ந்த இரண்டு பைப் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கவே வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வெடிகுண்டுகளின் ஒயர் இணைப்பு பணிகள் சென்னை அண்ணா பல்கலையின் மெக்கானிக்கல் துறையில் வைத்து செய்யப்பட்டதாகவும், இன்றே வெடிகுண்டு வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக துணை முதல்வர் உதயநிதி குறித்து பொருத்தமற்ற தகவல்களும் அந்த மெயிலில் இடம் பெற்றிருந்தன.







      Dinamalar
      Follow us