sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்லுாரிகளில் காலி பணியிடம் உறக்கத்தில் அரசு: பா.ம.க.,

/

கல்லுாரிகளில் காலி பணியிடம் உறக்கத்தில் அரசு: பா.ம.க.,

கல்லுாரிகளில் காலி பணியிடம் உறக்கத்தில் அரசு: பா.ம.க.,

கல்லுாரிகளில் காலி பணியிடம் உறக்கத்தில் அரசு: பா.ம.க.,


UPDATED : ஜூலை 09, 2025 12:00 AM

ADDED : ஜூலை 09, 2025 08:32 AM

Google News

UPDATED : ஜூலை 09, 2025 12:00 AM ADDED : ஜூலை 09, 2025 08:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
கல்லுரிகளில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:



அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர்கள், பணிமூப்பு அடிப்படையில் தான் நியமிக்கப்படுகின்றனர். கல்லுாரி ஆசிரியர்களின் பணிமூப்பு பட்டியல் தயாராக உள்ள நிலையில், ஒரே நாளில் அனைத்து கல்லுாரிகளுக்கும் முதல்வர்களை நியமிக்க முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் ஓய்வுபெறும் முதல்வர்கள் யார் என, அரசுக்கு முன்கூட்டியே தெரியும். ஆனாலும், அவற்றை நிரப்பாமல் அரசு என்ன செய்கிறது?

தமிழக அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், 9,000க்கும் அதிகமான உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அனைத்து அரசு கல்லுாரிகளுமே, கவுரவ விரிவுரையாளர்களை மட்டுமே நம்பி இருக்கின்றன.

இந்நிலையில், முதல்வர்களும் இல்லாவிட்டால், அரசு கல்லுாரிகளில் கட்டடங்கள் மட்டுமே இருக்கும்; கல்வி இருக்காது.

தி.மு.க., அரசு உறங்கிக் கொண்டிருக்கிறதா? காலியாக உள்ள 96 அரசு கல்லுாரி முதல்வர் பணியிடங்கள், 9,000க்கும் அதிகமான உதவி பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us