sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பேரிடர் மேலாண்மை குழு கல்லுாரிகளில் அமைக்க உத்தரவு

/

பேரிடர் மேலாண்மை குழு கல்லுாரிகளில் அமைக்க உத்தரவு

பேரிடர் மேலாண்மை குழு கல்லுாரிகளில் அமைக்க உத்தரவு

பேரிடர் மேலாண்மை குழு கல்லுாரிகளில் அமைக்க உத்தரவு


UPDATED : டிச 01, 2025 08:08 PM

ADDED : டிச 01, 2025 08:09 PM

Google News

UPDATED : டிச 01, 2025 08:08 PM ADDED : டிச 01, 2025 08:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
'அனைத்து வகை கல்லுாரிகளிலும், பேரிடர் மேலாண்மை குழு அமைக்க வேண்டும்' என, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், புயல் மழை, இயற்கை சீற்றத்திற்கு முன்னரும், பின்னரும், கல்லுாரிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, உயர் கல்வித்துறை செயலர் சங்கர், அனைத்து பல்கலை பதிவாளர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

புயல், மழை, இயற்கை பேரிடர் காலங்களில், கல்வி நிறுவன தலைவர் தலைமையில், பேரிடர் மேலாண்மை குழு அமைக்க வேண்டும்.

முதலுதவி குழு, தகவல் தொடர்பு அலுவலர், காவல் மற்றும் தீயணைப்பு சேவைகள், மருத்துவமனை, அவசர சிகிச்சை மையங்கள், போக்குவரத்து சேவைகள் குறித்த விபரங்களை, கல்லுாரி நிர்வாகம் வைத்திருக்க வேண்டும்.

கல்லுாரிகளில் மின் சாதனங்கள் முறையாக இல்லையெனில், சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லுாரி வளாகங்களில், சாய்ந்த நிலையில் உள்ள மரங்களை, பேரிடர் மீட்பு துறை உதவியுடன் அகற்ற வேண்டும். சேதமடைந்த கட்டடங்களை உடனடியாக சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us