sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பட்டப்படிப்பு சான்றிதழ்: யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை

/

பட்டப்படிப்பு சான்றிதழ்: யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை

பட்டப்படிப்பு சான்றிதழ்: யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை

பட்டப்படிப்பு சான்றிதழ்: யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை


UPDATED : டிச 01, 2025 08:10 PM

ADDED : டிச 01, 2025 08:12 PM

Google News

UPDATED : டிச 01, 2025 08:10 PM ADDED : டிச 01, 2025 08:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
'செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியான, 180 நாட்களுக்குள், பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்காத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, உயர்கல்வி நிறுவனங்களை பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., எச்சரித்து உள்ளது.

நாடு முழுதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில், செமஸ்டர் தேர்வுகள் முடிந்து, மாணவ - மாணவியருக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்கள் வழங்குவதில், பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்து வருகின்றன.

இது, மாணவ - மாணவியரின் வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியான, 180 நாட்களுக்குள், பட்டப்படிப்பு சான்றிதழ்களை, மாணவ - மாணவியருக்கு வழங்க வேண்டும் என, உயர்கல்வி நிறுவனங்களை, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, யு.ஜி.சி.,யின் செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலை களுக்கு அனுப்பிஉள்ள கடிதம்:

நாட்டில் சில உயர்கல்வி நிறுவனங்கள், உரிய காலக்கட்டத்துக்குள், செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதில்லை. பட்டப்படிப்பு சான்றிதழ்களை வினியோகிப்பதில்லை என, புகார்கள் வந்துள்ளன.

இது போன்ற தாமதங்கள், மாணவ - மாணவியர் தகுதியான வேலை வாய்ப்புகளை பெற தடையாக உள்ளன. அவர்களின் உயர்கல்விக்கும் இடையூறாக உள்ளது. யு.ஜி.சி., சட்ட விதியின்படி, மாணவ - மாணவியர் பட்டம் பெற தகுதி பெற்ற 180 நாட்களுக்குள், அவர்களுக்கு பட்டங்களை வழங்க வேண்டும்.

குறிப்பிட்ட கால அட்டவணையின்படி, செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். இதைப் பின்பற்றாத, உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ - மாணவியருக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்களை, தாமதமின்றி வழங்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us