தம்பு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தம்பு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
UPDATED : மே 18, 2026 02:58 PM
ADDED : மே 18, 2026 03:02 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்:
பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில் கடந்த, 1986ம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் நந்தகோபால், சவுந்தரராஜ் தற்போதைய தலைமை ஆசிரியர் ரமேஷ் உள்ளிட்ட ஆசிரியர்கள், 10 பேர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களுடைய பள்ளிக்கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசாக கைகடிகாரம் வழங்கப்பட்டது.
சந்திப்பு நிகழ்ச்சியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். பின்னர் அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
