sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

எஸ்.ஐ., பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு 129.50 மதிப்பெண் பெற்ற தினகர் முதலிடம்

/

எஸ்.ஐ., பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு 129.50 மதிப்பெண் பெற்ற தினகர் முதலிடம்

எஸ்.ஐ., பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு 129.50 மதிப்பெண் பெற்ற தினகர் முதலிடம்

எஸ்.ஐ., பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு 129.50 மதிப்பெண் பெற்ற தினகர் முதலிடம்


UPDATED : பிப் 25, 2026 11:19 AM

ADDED : பிப் 25, 2026 11:22 AM

Google News

UPDATED : பிப் 25, 2026 11:19 AM ADDED : பிப் 25, 2026 11:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 எஸ்.ஐ., பணிக்கு மொத்தம் 18 ஆயிரத்து 205 பேர் விண்ணப்பித்தனர். தகுதியுடைய 16 ஆயிரத்து 472 பேர் உடல் திறன் மற்றும் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் கோரிமேட்டில் நடந்த உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வில் 3,440 ஆண்கள், 802 பெண்கள் என மொத்தம் 4,242 பேர் பங்கேற்றனர். அவர்களில், 1,245 ஆண்கள் மற்றும் 72 பெண்கள் என 1,317 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 22ம் தேதி 4 மையங்களில் நடந்தது. அதில் முதல் தாள் தேர்வை 1,284 பேர், 2ம் தாள் தேரவை 1,282 பேர் எழுதினர்.

இத்தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. அதில், ஆண்களுக்கான பொது பிரிவில் - 20, எம்.பி.சி., - 8, ஓ.பி.சி., - 5, எஸ்.சி., - 8, இ.பி.சி., - 1, பி.சி.எம்., - 1, இ.டபிள்யூ.எஸ்., - 4, பெண்கள் பொது பிரிவில் - 14, எம்.பி.சி., - 4, ஓ.பி.சி., - 2, எஸ்.சி., - 3 என 70 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான கல்வி, வயது, பிறப்பிடம், வசிப்பிடம் மற்றும் சமூக சான்றிதழ்களின் அசல் சரிபார்ப்புக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

முதல் மூன்றிடம்


ஆண்கள் பிரிவில் தினகர் (எம்.பி.சி.,) 129.50; ஹரிஹரன் (எம்.பி.சி.,) 129.25; ஹரிகிருஷ்ணா (ஓ.பி.சி.,) 124.50 மதிப்பெண் பெற்று, பொதுபிரிவில் முதல் மூன்றிடங்களை பிடித்துள்ளனர்.

இதே போன்று, பெண்கள் பிரிவில் மோனிகா (ஓ.பி.சி.,) 109.75; வனிதாலட்சுமி (எம்.பி.சி.,) 108.50; அகிலா (எம்.பி.சி.,) 94.50 மதிப்பெண் பெற்று பொது பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

விடாமுயற்சியால் சாதனை


நோணாங்குப்பம் அடுத்த இடையார்பாளையத்தை சேர்ந்தவர் ஹரிகரன், 24, பட்டதாரி. ஊர்க்காவல்படை தேர்வில் தேர்ச்சி பெற்று 8 மாதம் பணியாற்றினார். பின், தீயணைப்பு வீரர் தேர்வில் தேர்ச்சி பெற்று 8 மாதம் பணியாற்றி வந்தார். இதற்கிடையே, வி.ஏ.ஓ., தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வரும் நிலையில், எஸ்.ஐ., பணிக்கான தேர்வும் எழுதினார். அதில், அவர் 129.25 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பிடித்தார். விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் அடுத்தடுத்து தேர்ச்சி பெற்று சாதனை படைத்த ஹரிகரனை பலரும் பாராட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us