UPDATED : ஆக 25, 2014 12:00 AM
ADDED : ஆக 25, 2014 12:23 PM
அ நிறம் | அளவு
தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி வட்டார வளமையத்தில் நடந்தது.
ஏ.இ.ஓ., ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் ஏ.இ.ஓ., ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கண்காட்சியை மேற்பார்வையாளர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். மாணவர்கள் அறிவியல் படைப்புக்களை காட்சிக்கு வைத்து விளக்கம் அளித்தனர்.
ஏ.இ.ஓ.,(அறிவியல்) முத்துசாமி பார்வையிட்டார். பயிற்றுனர்கள் பராங்குசம், செந்தில்குமார் நடுவர்களாக செயல்பட்டு சிறந்த 3 பள்ளிகளை தேர்வு செய்தனர். சுற்று வட்டார பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கண்காட்சியை பார்த்தனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
