sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆரம்பநிலை பயிற்சி

/

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆரம்பநிலை பயிற்சி

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆரம்பநிலை பயிற்சி

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆரம்பநிலை பயிற்சி


UPDATED : நவ 06, 2014 12:00 AM

ADDED : நவ 06, 2014 12:27 PM

Google News

UPDATED : நவ 06, 2014 12:00 AM ADDED : நவ 06, 2014 12:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மனவளர்ச்சி குன்றிய நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஆரம்பநிலை பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ஆறு வயது பூர்த்தியாகும் வரை ஆரம்பநிலை பயிற்சி அளித்து, அதற்குபின் நல்லநிலையில் உள்ள குழந்தைகளுடன் கல்வி பயிலும் அளவுக்கு, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை தயார்படுத்துவதே, இத்திட்டத்தின் நோக்கம்.

நடப்பு கல்வியாண்டு முதல், திருப்பூர் பாரதி வித்யாஸ்ரம் சிறப்பு பள்ளியில், அக்குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இப்பள்ளியில் 48 குழந்தைகள் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுடன், அரசு உதவியுடன் 15 பேர் இலவச பயிற்சி பெறுகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் கூறுகையில்,‘ஆறு வயது வரையுள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, ஆரம்பநிலை பயிற்சி அளிக்கப்படுகிறது. படிப்படியாக பயிற்சி அளித்து, ஒன்றாம் வகுப்பில் இருந்து கல்வியை தொடரும் வகையில், தயார்படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு, 0421 - 2200 834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,’ என்றனர்.






      Dinamalar
      Follow us