UPDATED : டிச 27, 2024 12:00 AM
ADDED : டிச 27, 2024 12:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
அரசு பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு நடக்கிறது. இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பள்ளி படிப்பை நிறைவு செய்யும் வரை மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், உடுமலை கிளை சார்பில் திறனறித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. உடுமலை மீனாட்சி திருமண மண்டபத்தில் நடந்த மாதிரி திறனறித்தேர்வில், 15 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 46 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு மனத்திறன், படிப்பறிவு திறன் உள்ளிட்ட இருபகுதிகளிலிருந்தும் வினாக்கள் தொகுக்கப்பட்டு தேர்வு நடந்தது. ஆசிரியர்கள் செல்லதுரை, ராதாகிருஷ்ணன், ஈஸ்வரசாமி, வேதநாயகி, ஜெயப்ரியா ஆகியோர் தேர்வை ஒருங்கிணைத்தனர்.