UPDATED : ஏப் 04, 2026 04:05 PM
ADDED : ஏப் 04, 2026 04:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை:
சென்னிமலை மகாகவி ஈரோடு தமிழன்பன் கலை இலக்கிய பேரவை சார்பில், அற இலக்கியங்கள் பார்த்தெழுதும் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
இதில் சென்னிமலை - பெருந்துறை ஆர்.எஸ்.ரோட்டில் கோரக்காட்டுவலசில் செயல்படும் கிரீன் கார்டன் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி பா.வர்ஷினி இரண்டாமிடம் பெற்றார்.
ஒன்பதாம் வகுப்பு செ.வர்ஷிகாஸ்ரீ, பி.ஆத்மிகா, ஈ.அர்த்தனா, சு.ஸ்ரீராம் மற்றும் வ.கிரித்திக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியரை கிரீன் கார்டன் பள்ளி தலைவர், தாளாளர், மற்றும் இயக்குநர்கள், முதல்வர் பாராட்டி வாழ்த்தினர்.

