sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பல்கலைக்கழகங்களில் நவீன கல்வி கூடங்கள்: ரூ.2 கோடி ஒதுக்கீடு

/

பல்கலைக்கழகங்களில் நவீன கல்வி கூடங்கள்: ரூ.2 கோடி ஒதுக்கீடு

பல்கலைக்கழகங்களில் நவீன கல்வி கூடங்கள்: ரூ.2 கோடி ஒதுக்கீடு

பல்கலைக்கழகங்களில் நவீன கல்வி கூடங்கள்: ரூ.2 கோடி ஒதுக்கீடு


UPDATED : ஜன 25, 2013 12:00 AM

ADDED : ஜன 25, 2013 07:53 AM

Google News

UPDATED : ஜன 25, 2013 12:00 AM ADDED : ஜன 25, 2013 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், பாரதியார், பாரதிதாசன், அழகப்பா, பெரியார், திருவள்ளுவர், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, 10  பல்கலைக்கழகங்களில், அரசு, நவீன கல்வி கூடங்களை அமைக்க உள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கும், 20 லட்ச ரூபாய் என, மொத்தம், 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

திரை, திரையிடும் கருவி, கணினி உள்ளிட்டவற்றுடன் இணைத்து, நவீன கல்வி கூடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இணையதளமும் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். "பவர் பாயின்ட், அனிமேஷன்" முறையில் கற்றுத் தரும் வகையில், பாடங்கள் உருவாக்கப்படுகின்றன.

திரையில் பாடங்கள் குறித்த தகவல்களை, எழுதுகோல் மூலமாக எழுதலாம். இவை கணினியில் பதிவாகின்றன. மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை என்றால், "சிடி, பென் டிரைவ்" ஆகியவற்றில் பதிந்து, கற்றுக் கொள்ளலாம்.

சென்னை பல்கலைக் கழக பாடத் திட்டக் குழு தலைவர், ரவீந்திரன் கூறியதாவது: ஆசிரியர் பாடம் எடுக்கும் போது, மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்பு உண்டு. படங்களை இணைத்து, "பவர் பாயின்ட், அனிமேஷன்" மூலம் வகுப்புகள் எடுக்கும் போது, கவனம் சிதறாது.

மொழி பிரச்னையில் சிக்கும் மாணவர்களும், படங்கள் வாயிலாக, பாடங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
இம்முறையில் கல்வி கற்பிப்பதால், நேரம் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு, ரவீந்திரன் கூறினார்.






      Dinamalar
      Follow us