UPDATED : ஜன 14, 2025 12:00 AM
ADDED : ஜன 14, 2025 11:25 AM

நாமக்கல்:
புதிய தொழிற்பள்ளிகள் துவங்க, புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்.,28ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:
நடப்பு, 2025-26ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
ஜன., 2 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2025-26ம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம், 5,000 மற்றும் ஆய்வு கட்டணம், 8,000- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்.,28ம் தேதி. மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது இயக்குனரக மின்னஞ்சல் detischennai@gmail.com மற்றும் 044-22501006 (113) என்ற தொலைபேசி மூலமாகவோ விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.