sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பொங்கல் விழா கலை போட்டிகள் 600 மாணவர்கள் பங்கேற்பு

/

பொங்கல் விழா கலை போட்டிகள் 600 மாணவர்கள் பங்கேற்பு

பொங்கல் விழா கலை போட்டிகள் 600 மாணவர்கள் பங்கேற்பு

பொங்கல் விழா கலை போட்டிகள் 600 மாணவர்கள் பங்கேற்பு


UPDATED : டிச 10, 2025 07:52 AM

ADDED : டிச 10, 2025 07:54 AM

Google News

UPDATED : டிச 10, 2025 07:52 AM ADDED : டிச 10, 2025 07:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்:
கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழாவை முன்னிட்டு நீலகிரி தமிழ்ச் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கலை மற்றும் இலக்கிய போட்டிகள் நடந்தது.

செயலாளர் நாகநாதன் வரவேற்றார். விழாவுக்கு சங்கத்தின் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். போட்டிகளை, லண்டனில் டாக்டராக பணிபுரிந்து வரும் கூடலூரை சேர்ந்த சிவதாஸ் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, மாணவர்களுக்கு இடையே பேச்சு, கவிதை, ஓவியம், கட்டுரை, சித்தர் பாடல் ஒப்புவிப்பு, கோலப்போட்டிகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட 27 வகையான போட்டிகள் நடந்தது. கூடலூர் வட்டாரத்தைச் சேர்ந்த 600 மாணவ மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

விழாவில், சங்கத்தின் பொருளாளர் மணிகண்டன், துணைத் தலைவர ஜெகநாதன், துணைச் செயலாளர்கள் கணேசன், கலைசெல்வன், பள்ளி ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பந்தலூர் புனித சேவியர் பள்ளியில் நேற்று முன்தினம், நீலகிரி தமிழ் சங்கம் சார்பில் நடந்த கலை, இலக்கிய போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us