sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வேலையோடு சேர்ந்து போட்டியும் அதிகரிக்கிறது!

/

வேலையோடு சேர்ந்து போட்டியும் அதிகரிக்கிறது!

வேலையோடு சேர்ந்து போட்டியும் அதிகரிக்கிறது!

வேலையோடு சேர்ந்து போட்டியும் அதிகரிக்கிறது!


UPDATED : அக் 26, 2014 12:00 AM

ADDED : அக் 26, 2014 11:54 AM

Google News

UPDATED : அக் 26, 2014 12:00 AM ADDED : அக் 26, 2014 11:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

100 இடங்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது என்றால், 10 ஆயிரம் பேர் வருகின்றனர். இவர்களில் இருந்து 100 பேருக்குள் வருவது எளிதல்ல. வேலைக்கு செல்லவிருக்கும் நிறுவனம் எதிர்பார்க்கும் திறமையை வளர்த்துக்கொண்டு, நேர்காணலை சந்தித்தால் வேலை பெறலாம்.

இன்றைய இளைஞர்கள் வேலை தேடுவதில் பல விதமாக செயல்படுகின்றனர். சிலர் ஏதாவது வேலை கிடைத்தால் போதும் என படிப்புக்கு சம்மந்தமில்லாத வேலைக்கு செல்கின்றனர். சிலர், படித்த துறையிலேயே வேலைக்கு போகவேண்டும் என நாட்களை கடத்துகின்றனர். இதனால் எந்த துறையில் பணியில் சேர்வது என்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன.

படித்து முடித்த சில ஆண்டுகளிலேயே மூன்றுக்கும் மேற்பட்ட துறைகளில் பணி மாறியவர்கள் உண்டு. தங்களின் திறன் எது என முதலில் கண்டறிந்து பணிகளை தேர்வு செய்யலாம். அது கல்வியினால் பெற்றதாகவோ, இயற்கையாக அமைந்ததாகவோ இருக்கலாம்.

ஒரு துறை சார்ந்த பணியில் ஈடுபட முடிவு செய்து விட்டால், ஏற்கனவே அத்துறையில் இருப்பவர்களிடம் யோசனை கேட்கலாம். பலரும், வேலை இழப்பதற்கு காரணம், பணிபுரியும் துறையை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளாதது மற்றும் ஈடுபாட்டோடு வேலை பார்க்காததுதான்.

துறை சார்ந்த புதிய திறன்களை மேம்படுத்திக்கொள்ள தயங்கக் கூடாது. உங்களிடம் இருந்து வேலை வாங்கலாம் என்ற மனநிலை நிறுவனத்திடம் நீடிக்கும் வரை மட்டுமே, அந்நிறுவனம் உங்களை பணியில் தொடர அனுமதிக்கும்.

எங்கு சம்பளம் அதிகம் கிடைக்கிறது என்பதைப் பார்த்து பணியில் சேர்வதை விட, எந்த துறையில் சேர்ந்தால் அதிக காலம் பணியாற்ற முடியும் என பார்த்து சேர்வது நல்லது.






      Dinamalar
      Follow us