UPDATED : டிச 08, 2023 12:00 AM
ADDED : டிச 08, 2023 11:31 AM
போத்தனுார்:
திருமலையாம்பாளையத்திலுள்ள நேரு தொழில்நுட்ப கல்லுாரியில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான கவுன்சில் கூட்டம் மற்றும் கண்காட்சி நடந்தது.எம்.ஓ.இ., புதுமை செல், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை இணைந்து நடத்திய இந்திழ்ச்சிக்கு, நேரு கல்வி குழும செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மத்திய அரசின், ஐ.ஐ.சி., மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., உதவி புதுமை படைப்புகள் இயக்குனர் தீபன் சாஹா பேசினார். கல்லூரி முதல்வர் சிவராஜா வரவேற்றார். மாநிலம் முழுவதுமிருந்து கல்லுாரி மாணவர்கள், ஸ்டார்ட்- அப் நிறுவனங்கள், தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.இப்போ பே முதன்மை நிர்வாக அலுவலர் மோகன், இயக்குனர் இர்பான் அஹமது, நிர்வாக இயக்குனர் நாகராஜா, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். கன்வீனர் சிந்துஜா நன்றி கூறினார்.
