sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தேர்வு முறைகேடுக்கு சிறை தண்டனை

/

தேர்வு முறைகேடுக்கு சிறை தண்டனை

தேர்வு முறைகேடுக்கு சிறை தண்டனை

தேர்வு முறைகேடுக்கு சிறை தண்டனை


UPDATED : பிப் 07, 2024 12:00 AM

ADDED : பிப் 08, 2024 08:57 AM

Google News

UPDATED : பிப் 07, 2024 12:00 AM ADDED : பிப் 08, 2024 08:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
போட்டி தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில், வினாத்தாள் கசிவது, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடக்கின்றன. இது போன்ற மோசடிகளை திட்டமிட்டு செயல்படுத்துவதையே பல கும்பல்கள் தொழிலாக செய்து வருகின்றன.அரசு அதிகாரிகளும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு துணை போகும் சம்பவங்களும் கடந்த காலங்களில் அரங்கேறி உள்ளன. இந்நிலையில், தேர்வு முறைகேடுகளை தடுக்கும் வகையில், பொதுத் தேர்வுகள் மசோதா - 2024 லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவின்படி, போட்டி தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு, அதிகபட்சம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.மேலும், கணினி மயமாக்கப்பட்ட தேர்வு செயல்முறையை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற, பொதுத் தேர்வுகளுக்கான உயர்மட்ட தேசிய தொழில்நுட்பக் குழு அமைக்க, இந்த மசோதா வழி செய்கிறது.தேர்வு மையங்களின் மின்னணு கண்காணிப்பை உறுதி செய்தல், தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளை வகுத்தல், தேசிய தரநிலைகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல் போன்ற அம்சங்களை, இந்த குழு ஆராயும்.ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களை தடுப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம். இந்த மசோதா மீதான விவாதம் லோக்சபாவில் நேற்று நடந்தது. இந்த மசோதா மீது, எதிர்க்கட்சியினர் பரிந்துரைத்த சில திருத்தங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us